தெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரிஷாத் பதியுதீன் தற்போது குற்றப்புலனாய்வுப் காவலில் உள்ளார்.
இந்நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை அழைத்து சென்றமை தொடர்பாக பொது நிதியை தவறான முறையில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றசாட்டுகள் ரிசாத் பதியுதீன் மீது சாட்டப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா காவல்துதுறை.
ReplyDeleteInsha Allah
ReplyDeleteunmai vellum.