Header Ads



கொழும்பில் பாடசாலை மாணவியின் பெற்றோருக்கு கொரோனா


கொழும்பு-07, பிரிஜ்ஜெற்ஸ் கொன்வென்ற் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் என பாடசாலை நிர்வாகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதவேளை, கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகள், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.