Header Ads



டுபாயில் அவதிப்படும் இலங்கையர்கள் - பூங்காவில் தங்கியிருக்கும் புகைப்படம் வெளியாகியது


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் சிலர் டுபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த இலங்கையர்களுக்கு தங்குமிடம் உட்பட அடிப்படைத் தேவைகள் எதுவும் இன்றி பூங்காவில் தங்கியுள்ளனர். அவர்களில் பலர் மூன்று மாத Visit Visa பெற்றுக் கொண்டு டுபாய் சென்றுள்ளனர்.


அங்கு சென்றவர்களால் தொழில் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதிலும் தொழில் பெற முடியாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


தொழிலை இழந்தவர்களும் தொழில் கிடைக்காத இலங்கையர்களும் பூங்காவில் தங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.