முகாமையாளருக்கு விளக்கமறியல், பணிப்பாளர்களுக்கு பிடியாணை
பிரிவேல்த் குளோபல் எனும் தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்டவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் இன்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாக்கு எதிரான பிடியாணை உத்தரவினையும் பொத்துவில் நீதவான் எம்.எச். முஹம்மத் ராபீ பிறப்பித்தார்.
காசோலை மோசடி மற்றும் மத்திய வங்கியில் நிதி நிறுவனமாக பதிவுசெய்யாது பொதுமக்களின் பணத்தினை வசூலித்து பண மோசடி செய்தமை ஆகியன தொடர்பில் 12 முறைப்பாடுகள் அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பெருங் குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், குறித்த தனியார் நிறுவனத்தின் பொத்துவில் கிளையின் முகாமையாளராக செயற்பட்டவரை (05) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு இன்றுபொத்துவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான ஏ.பீ.எம்.மாஹீர் மற்றும் ஏ.எம்.சாதீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment