Header Ads



மாணவிக்கு கொரோனா, மாணவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை – சுகாதார பிரிவு


கம்பஹாவில் மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகா தாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த மாணவியின் தந்தை மினு வாங் கொடை பிரன்டிக்ஸ் ஆடைத் தொழிற் சாலை யில் பணி புரிந்தபோது கொரோனா வைர ஸால் பாதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவிக்கு மேற்கொண்ட பரி சோதனையின் போது கொரோனா தொற்று இருப் பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மினுவங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி குறித்த தகவலை பாடசாலைக்கு அறிவித் துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவியோடு கல்வி கற்ற 12 ஆம் தர மாணவர்களைத் தனிமைப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.