மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ, கட்டான, குருணாகல், கட்டுபொத்த, மொனராகல, மெதகம, யாழ், வேலணையிலும் கொரோனா
திவுலபிட்டிய, மீரிகம, ஜாஎல, மஹர, சீதுவ மற்றும் கட்டான ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதேவேளை விடுமுறையில் சென்றிருந்த குறித்த ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய குருணாகல் - கட்டுபொத்த, மொனராகல - மெதகம மற்றும் யாழ்ப்பாணம் - வேலணை ஆகிய பகுதியை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
இதுவரையில் 2000 இற்கு அதிகமானவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மினுவங்கொட வைத்தியசாலை மற்றும் இரணவில கொவிட் சிகிச்சை மத்திய நிலையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்கு பரிசோதனை நடத்த கம்பஹா வைத்தியசாலையை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment