Header Ads



றிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 


குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார். 


அதனடிப்படையில் தெஹிவளை, எபனைஸ் கிளேஸ் பகுதியின் அடுக்குமாடி வீட்டு தொடரில் உள்ள வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.