Header Ads



அரசாங்கம் அணிசேராக் கொள்கையையே பின்பற்றுகிறது - நாமல் திட்டவட்டமாக அறிவிப்பு


அரசாங்கம் அணிசேரா கொள்கையை பின்பற்றுகின்றது இதன் காரணமாக அரசாங்கம் எந்த வெளிநாட்டு பிரதிநிதி வரவேற்க தயாராகவுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச அனுராதபுரத்தில் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிக்கு அரசியல் சுலோகங்கள் தேவையாகவுள்ளது இதன் காரணமாக அவர்கள் அமெரிக்காவுடனான உறவு குறித்து உறுதியான நிலைப்பாட்டை முன்வைக்காமல் மைக்பொம்பியோவி;ன் விஜயத்தை எதிர்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் காலத்திலும் மைக்பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்கள் அமெரிக்கா ராஜபக்ச அரசாங்கத்தை மதிக்காது என தெரிவித்தனர் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடு அணிசேராக்கொள்கையை பின்பற்றுவதாலேயே அவர் மீண்டும் இலங்கை வருகின்றார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அசைமச்சர் வருகையும் சீன குழுவினரின் வருகையும் இலங்கையின் வெளிநாட்டுக்கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அணிசாராத கொள்கை என்றால் என்ன என இவர் எங்களுக்குக் கொஞ்சம் விரிவாக எடுத்துரைப்பாரா?

    ReplyDelete

Powered by Blogger.