Header Ads



ஜனாதிபதியின் உத்தரவில் இன்று நள்ளிரவு முதல், விலை குறையவுள்ள பொருட்களின் விபரம்


இறக்குமதி செய்யப்படும் சில அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய பருப்பு, தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின்மீன்) பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான இற்ககுமதி வரி நீக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டின் மீன் (பெரியது) ஒன்று 200 ரூபாவிற்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கும், சீனி ஒரு கிலோகிராம் 85 ரூபாவிற்கும் பருப்பு ஒரு கிலோகிராம் 150 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் சதொச விற்பனை நிலையங்களில் தேங்காயை சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. மழை பொழிவது நின்றாலும் தூவாணம் விசுருவது நிற்காது என்று கூறுவார்கள். இன்னும் இரண்டு கிழமைகளுக்குள்ளாவது - பெரிய வெண்காயம் 1 கிலோ 100/= ரூபர; சீனி 1 கிலோ 85/= ரூபர் பருப்பு 1 கிலோ 150/= ரூபாவிற்கு விற்கப்படுமா என்பதனைப் பார்ப்போம்.


    ReplyDelete

Powered by Blogger.