Header Ads



துப்பாக்கி பிரயோகத்தில் மதூஷ் பலி - மாளிகாவத்தைக்கு அழைத்துச்சென்ற போது சம்பவம்



பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 


மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று அதிகாலை மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 


இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். 


இதனை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 


சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


அத்துடன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 


இதன்போது அங்கிருந்து 22 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. 


ஒன்றரை வருட காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த வௌ்ளிக்கிழமை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தார். 


பல வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.