Header Ads



திஹாரி ஆடைத் தொழிற்சாலைக்குள்ளும் கொரோனா


திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


இந் நிலையில் தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியருக்கு ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பிலும் ஆராயப்படுவதுடன், திஹாரிய ஹெலா தொழிற்சாலையின் ஊழியர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களின் சோதனை முடிவுகள் வெளியானதும் ஆடைத் தொழிற்சாலையை திறப்பது தொடர்பான முடிவுகள் எட்டப்படும் என்றும் நிர்வாகத்தினர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.