Header Ads



யாழ்ப்பாணம், மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள்

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

குறித்த இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு இனம் காணப்பட்ட இரு நோயாளிகளும் தற்போது சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.