Header Ads



ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - மிக அவசரத்தை தவிர, அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம்


ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறு, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ  உத்தரவை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்த ஜனாதிபதி, மிக அவசர தேவையைத் தவிர, தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாமென்றும்  ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.   

கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிபாடு உட்பட மக்கள் ஒன்று கூடல் எதனையும்  தவிர்க்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார் . 

No comments

Powered by Blogger.