Header Ads



புங்குடுதீவில் பூசகர் அடித்துக் கொலை


யாழ். புங்குடுதீவில் ஆலயப் பூசகர் ஒருவர் இன்று அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை  இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.


புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் ஆலயப் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


இக்கொலைக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.


பூசகரின் கொலையுடன் உதவியாளருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

No comments

Powered by Blogger.