Header Ads



கம்பஹா, மினுவான்கொட பகுதிக்கு சமீபத்தில் சென்றவர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்


கம்பஹா மினுவான்கொட பகுதிக்கு சமீபத்தில் சென்றுவந்தவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திவுலுப்பிட்டியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொரோனா தொற்றியது என்பதை கண்டுபிடிக்க முடியாமலுள்ளது அதிகாரிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக அந்தபகுதிக்கு சென்றுவந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.


இதேவேளை கம்பஹாவில் எவராவது காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டால் அல்லது அதற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் உடனடியாக தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.