Header Ads



பிரண்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள உத்தரவு


மினுவங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் கம்பஹா பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதியில் தங்கியிருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 


அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று மாலை 4 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அவர்களை வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


கம்பஹா ஸ்ரீ போதி மைதானம்

கனேமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு முன்னால்

மினுவங்கொட, யகஹடுவ சந்தி 

வெயங்கொட பொலிஸ் நிலைய மைதானம்

நிட்டம்புவ, அத்தனகல்ல பிரதேச செயலகம்

பல்லேவெல தபால் நிலையம் அருகில்

மீரிகம பிரதான பேருந்து நிலையம்

வீரகுல பொலிஸ் நிலையத்திற்கு முன்னால்

யக்கல மிரிஸ்வத்த பிரதேச சபை அருகில்

மல்வத்துஹிரிபிட்டிய, நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிலையம் அருகில்

வெலிவேரிய பொலிஸ் நிலையம் அருகில்

கிரிந்திவெல வேகே பிரதேச செயலகம் அருகில்

தொம்பே பொலிஸ் நிலையம் அருகில்

பூகொட, பெல்பிட்ட கனிஷ்ட வித்தியாலயம் அருகில்

No comments

Powered by Blogger.