Header Ads



பிரன்டிக்ஸ் தொழிற்சாலை தொடர்பில், சுயாதீன விசாரணைக்கு உத்தரவு


மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலாளிமார்கள், தனியார் துறை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய, அந்த தொழிற்சாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பதை ஆராய்வது இதன் நோக்கமாகும் என அமைச்சின் செயலாளர் எம்.பீ.யூ.டீ.கே. மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலின் போது முதலாளிமார், தனியார் பிரிவு தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைச்சு இணைந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்துப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.