Header Ads



கொழும்பில் நேற்றிரவு இருவர் திடீர் மரணம்? - பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு


நேற்று (28) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த இருவர் தொடர்பில், பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


வேறு நோய்கள் காரணமாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலையில், உயிரிழந்த இருவரின் சடலங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உயிரணு மாதிரிகளை பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும் இதற்கமைய, இவர்களின் உயிரிழப்புக்கு காரணம் கொரோனா தொற்றா என்பது குறித்து இன்று பகல் தெரிந்துகொள்ளலாம் என்றம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.