எனக்கு உணவு இல்லை, நான் மிகவும் கடினமான முடிவுக்குச் செல்ல உள்ளேன் - சுமணரத்ன தேரர்
நான் மிகவும் கடினமான முடிவுக்குச் செல்ல உள்ளேன். என்னை ஆதரிக்கும் மக்களுக்கு நான் இதனைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். எனக்கு இன்று உண்ணக்கூட உணவு இல்லை.
என்னை ஆதரிக்கும் மக்கள் கொடுக்கும் நூறு ரூபாய் இருநூறு ரூபாய் பணத்தை எடுத்துச் சென்று நேற்றையதினம் 15000 ரூபா தண்டப்பணத்தை நான் நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வந்துள்ளேன்.
நேற்று என்னையும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த மக்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தியதால் நான் தண்டப்பணம் செலுத்த நேர்ந்தது. இவை அனைத்தும் திட்டமிட்டே செய்யப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment