Header Ads



நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார்.´


நாட்டில் 2,000 பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையங்களைத் அமைத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


ரிவி தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 360 விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இராணுவ தளபதி இந்த கருத்தினை தெரிவித்தார். 


அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் போதுமானதாக இல்லை எனவும், தற்போது சுமார் 10,500 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


´தற்போதைய சூழலில் இரண்டாயிரம் பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் தற்போதைய நிலையில் 96 வயதிற்குட்பட்ட 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் போதாது என்று மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் சொன்னார்களா? நாம் இதுவரை 51,000 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம். எனவே, முடியாதது என்று எதுவும் இல்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார்.´ 


இதேவேளை, மினுவாங்கொட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொத்தனியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் யார் என்பது குறித்தும் இராணுவத் தளபதி தெளிவுப்படுத்தினார். 


´அந்த பெண் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அவரை பின் தொடர்ந்த போது சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளை கொண்டுள்ளமை உறுதியானது. இவ்வாறு தேடி வருகின்றோம். இப்படி இருக்கையில் இதுதான் ஆரம்ப புள்ளி என எந்தவித நம்பிக்கையுமின்றி சொல்வதில் நியாயமில்லை.´ 


புலனாய்வு பிரிவு உட்பட அனைத்து இராணுவமும் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்டு வந்தாலும் அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை எனவும் இராணுவ தளபதி கூறினார். 


அனைத்து அதிகாரிகளும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

No comments

Powered by Blogger.