Header Ads



புத்தளத்தில் தற்காலிகமாக, மஸ்ஜித்களை மூட தீர்மானம்


எம்.யூ.எம். சனூன்

புத்தளம் நகர சுகாதார அதிகாரியின் அறுவுறுத்தல்களுக்கு அமைய 2020.10.29ஆம் திகதி இரவு 8.00 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெற்ற கலந்துரையா டலில்  தற்காலிகமாக மஸ்ஜித்களை மூடுவதென  முடிவெடுக்கப்பட்டது.

இதில், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா, பெரிய பள்ளி, தில்லையடி மஸ்ஜித் சம்மேளனம் மற்றும் நகர பள்ளிவாயல்கள் இணைந்து  இன்று   (2020.10.30ஆம் திகதி) முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மஸ்ஜித்களை மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.

எனவே, சகல நிர்வாகிகளும் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து செயல்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.