Header Ads



மதுசின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு


மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்  உயிரிழந்த மாகந்துரே மதுஷ் தொடர்பான நீதவான் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


கொழும்பு புதுக்கடை  இலக்கம் 04 நீதிமன்ற நீதவானால் இந்த மரண விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


மாகந்துரே மதுஷின் மனைவியின் முன்னிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதனையடுத்து, பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.