Header Ads



விமல் வீரவங்ச ஒரு மோசடியாளன் - ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த


விமல் வீரவங்ச என்பவர் ஒரு மோசடியாளர் எனவும் அவரது அடுத்த இலக்கு ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்புவது எனவும் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.


தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.


விமல் வீரவங்சவை விட பெரியவர்கள் ராஜபக்சவினரை வீட்டுக்கு அனுப்ப முயற்சித்ததாகவும் அது முடியாமல் போனது எனவும் வீரவங்ச கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரை சார்ந்த சிங்கள தேசிய அமைப்புகள் 20வது திருத்தச் சட்டம் மற்றும் பசில் ராஜபக்ச தரப்பினரை கடுமையாக விமர்சித்து வருவதுடன் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகும் யோசனையையும் எதிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஆளும் கட்சிக்குள் விமல் வீரவங்சவுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.