சு.க. யுடன் தேரர்கள் அவசர கலந்துரையாடல் - பிரஜாவுரிமை சரத்தை நீக்கக் கூடாதென விடாப்பிடி
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளிள் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர்,நாரஹேன்பிட்டி அபேராமய விகாரையில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபேராமய விகாரையின் விகாராதிபதி முருதொட்டுவாவே ஆனந்த தேரர் மற்றும் எல்லே குணவன்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்த விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இதன்போது அரசமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை ஷரத்தை நீக்கக் கூடாதென, முருதுட்டுவாவே ஆனந்த தேரர் உள்ளிட்ட தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment