Header Ads



'ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்' நிகழ்ச்சித்திட்டத்திற்கு பலன் கிடைத்தது


மாத்தளை, வில்கமுவ, ஹிம்பிலியாகட கிராமத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய நிர்மாணப் பணிகள், சேவைகளை வழங்குவதற்கு முன்னுரிமையளித்து நிகழ்ச்சித்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த ஒக்டோபர் 02ஆம் திகதி மாத்தளை மாவட்டத்திற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

கிராமிய மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது சுற்றுப்பயணத்தின் நோக்கமாகும்.

“ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்” இரண்டாவது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றி வில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவில் கெம்புறு ஓய, லேடியன்கல, அலியாவல, வெஹரகல, ஹிம்பிலியாகல மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமங்களின் மக்களை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

மக்கள் காணி உரிமை, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர், பண்ணை வளர்ப்பு, சிறுநீரக நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்தனர். நீண்ட காலமாக தீர்க்கப்படாதுள்ள ஹெட்டிபொல நகரின் காணி உறுதி பிரச்சனைகளை தீர்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹிம்பிலியாகட கிராம மக்களுக்கு காணிகளுக்கான 110 காணி உறுதிகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஹிம்பிலியாகட ஆரம்ப பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம், ஆசிரியர் விடுதி, மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகள் இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்க ஹிம்பிலியாகட நாகவனாராம விகாரை வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்றை பொருத்தும் பணிகள் கடற் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இராணுவத்தினர் சுமார் 2000 ஏக்கர் வயல் காணிகளுக்கு நீர்ப்பாசனத்தை வளங்கும் வில்கமுவ பிரிவில் உள்ள வத்தேகெதர மற்றும் தொடம்கொல்ல குளங்களின் புனர்நிர்மாணப் பணிகளை திட்டமிட்டு வருகின்றனர்.

நீர் ஊற்றுக்களை இனம்கண்டு 10 விவசாய கிணறுகளை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெஹரகல முதல் ஹெட்டிபொ நரகம் வரையிலான 2.8 கி.மீ மற்றும் ஹிம்பிலியாகட குளத்திலிருந்து ஹிம்பிலியாகட கிராமத்திற்கான பாதை அபிவிருத்தி பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. ஹெட்டிபொல – ஹிம்பிலியாகட பாதையூடாக செல்லும் பஸ் வண்டியொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அனைத்து திட்டங்களையும் மூன்று மாத காலப் பகுதியில் நிறைவுசெய்து மக்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.



ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.10.20


No comments

Powered by Blogger.