பெண் ஊழியர் வைரசினால் பாதிக்கப்பட முன்னரே பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கொரோனாவினால் பாதிக்கப்படுவதற்கு முனனரே பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
நோய் தொற்றுவார இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் 20ம் திகதி முதல் பலர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுளளார்.
குறிப்பிட்ட பெண்மணி மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே ஆடைதொழிற்சாலையில் பலர் சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கண்டுபிடிக்கப்படாத நோயாளர்கள் அனைவரையும் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment