Header Ads



78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா, 300 பேர் தனிமைப்படுத்தல் - 1800 பேர் சுய தனிமைப்படுத்தல்


நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களை சேர்ந்த 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

கொழும்பில் இன்று -31- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

மேலும், 300 க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 1800 க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.