கம்பஹா மாவட்ட சகல, பாடசாலைகளுக்கும் 5 முதல் 9 வரை விடுமுறை
கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும், தனியார் வகுப்புக்களுக்கும் (05) திங்கட்கிழமை முதல் (09) வெள்ளிக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்கு, மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 55 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களும், மாணவர்களும் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிச் செயற்படுமாறு, சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment