Header Ads



ஓவ்ட்டிகல விகாரையின் தலைமை பிக்குவுக்கும், 4 துறவிகளுக்கும் கொரோனா


மத்துகம - ஓவ்ட்டிகல விகாரையின் தலைமை பிக்கு மற்றும் நான்கு துறவிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை மத்துகம பொது சுகாதார அதிகாரி பி.டி.லயனல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இதுவரை மத்துகம சுகாதாரப் பிரிவில் மொத்தம் 26 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மத்துகமையில் ஏற்கனவே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் ஒரு சொகுசு பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பெலவத்த பகுதியில் உள்ள தேசிய மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு தாதி ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று தொற்றுடன் கண்டறியப்பட்ட துறவிகள் சொகுசு பேருந்தில் அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்று திரும்பிய நிலையில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.