Header Ads



இலங்கையில் இளைஞன் ஒருவருக்கு 3 வது தடவையாகவும் கொரோனா தொற்று


ஆனமடுவ, தென்னன்குரிய பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞன் மூன்றாவது முறையாக கொரோனா தொற்றிளுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை இயக்குனர் வைத்தியர் எம்.பரிட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட இளைஞர் டுபாய் நாட்டில் பணியாற்றி விட்டு ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளர். இதனால் போது வெலிகந்த கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குனமடைந்து வீடு திரும்பிய இளைஞன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

தனது தாயுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது இரண்டாவது முறையாக கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட பின்னர் செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இரண்டாவது முயைாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய இரணவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மீண்டும் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.

எப்படியிருப்பினும் குறித்த இளைஞன் உரிய தனிமைப்படுத்தல் முறையின் கீழ் அவரது வீட்டினுள் தனிமைப்படுத்த ஆனமடு சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகம் நடவடிக்கை மேற்கொண்டது.

எப்படியிருப்பினும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்த இளைஞன் மீண்டும் சுகயீனமைடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் மூன்றாவது முறையாகவும் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மூன்றாவது முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி இந்த இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.