Header Ads



3 தினங்களுக்குள் அரச, தனியார் ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுமாறு உத்தரவு


எதிர்வரும் 3 தினங்களுக்குள் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிள் சேவையாற்றக்கூடிய ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். 


தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 


தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.