Header Ads



மினுவாங்கொடை கொரோனா தொற்று 321 ஆக அதிகரிப்பு


திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 220 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 


அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. 


இதேவேளை குறித்த பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் சேவையாற்றிய 101 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை நேற்றை தினம் இனங்காணப்பட்டிருந்தது. 


நேற்று (05) கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


நேற்றை தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானவர்கள் மினுவங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.