Header Ads



முல்லைத்தீவு கடற்பரப்பில் அலியார், முர்சலீன் என்ற 2 மீனவர்களை காணவில்லை


 - ஏ.எல்.றபாய்தீதீன்பாபு -   

முல்லைத்தீவு கடற்பரப்பில்  ஜமாலியா மீனவர் இருவரை ஆறு நாட்களாகியும் காணவில்லை திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு .   கடந்த 19 ஆம் திகதி  மணல் குடியிருப்பு என்னுமிடத்தில் ஜமாலியா கிராமத்தைச் சேர்ந்த  இருவர் முல்லைத்தீவு   கடல் பரப்பில் மீன் பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளனர். 

இவ்விரு   வரும் கரை  திரும்பாததன்   காரணமாக கடந்த ஐந்து நாட்களாக உறவினர்கள் மற்றும் கடற்படையினர்  தேடி வருவதாக ஜமாலியா மீனவர் கிராமிய அமைப்பின் தலைவரும் பள்ளிவாசல் நம்பிக்கையாளருமான  பீர்பான்ஸா இர்ஷாத் (ஈஸா) தெரிவித்தார். 

இவ்வாறு காணமல்  போன குடும்பஸ்த்தவர்கள் அலியார் சலீம் வயது 56 முர்சலீன்  றிழ்வான் வயது 34. ஆகியோராவர். காணாமல் போன இவர்கள் Uற்றி பொலிஸார் புலன் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.