கொரோனாவால் மரணித்த 16 ஆவது நபர் என கூறப்பட்டவரின் விபரம் வெளியாகியது - உடல் எரிக்கப்படுவதை தடுக்க முயற்சி
நேற்று ஞாயிற்றுக்கிழமை -25- கொரோனாவால் மரணித்தவர் எனக்கூறப்பட்ட 16 ஆவது நபர் முஹம்மது ரபீக் முஹம்மது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனை மேல் மாகாண முன்னாள் ஆளுநர், ஆசாத் சாலி உறுதிப்படுத்தினார்
இதய நோய் உள்ளிட்ட மேலும் சில நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 70 வயதுடையவர்.
அவர் உண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், ஏன் அந்த பகுதியை சுகாதாரத் தரப்பினர் இன்னும் முடக்கவில்லை எனவும் ஆசாத் சாலி கேள்வி எழுப்பினார்.
தற்போது வரை அந்த நபருடை உடல் எரிக்கப்படவில்லை எனவும் அந்த முஸ்லிம் நபரின் உடலை எரிக்கக்கூடாது என வாதிட்டு வருவதாககவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
May Allah change minds of authority and let the janata buried according to Islamic method
ReplyDelete