Header Ads



14 வைத்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்



கொரோனா  தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் 14 வைத்தியர்கள் உள்ளிட்ட 53 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள பெண், கொழும்பு ஐ.டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரபாத் வேரவத்த தெரிவித்துள்ளார்.


எனவே அத்தியாவசிய தேவைக்காக அன்றி, வேறு விடயங்களுக்காக  வைத்தியசாலைக்கு வருவதைத் தவிர்க்குமாறும் பிரதேசவாசிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.