றிசாத்திற்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான பத்து குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்துவருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசார ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
பத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடியினர் விசாரணை செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவே பல குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரை சட்டமா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment