இன்று 103 பேர் கொரோனா தொற்றுடன் கண்டுபிடிப்பு
இலங்கையில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 101 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment