Header Ads



இலங்கையில் 10,000 ஆயிரத்தை கடந்த, கொரோனா நோயாளிகள் - இன்று 314 பேருக்கு தொற்று


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 

இன்றைய தினம் -30- இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 55 பேருக்கும் மற்றும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 259 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6627 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.