Header Ads



UNP யின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் இணைவு சாத்தியம் - ஐக்கிய மக்கள் சக்தி


ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கியமக்கள் சக்தியும் ஐக்கியதேசிய கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ருவான் விஜயவர்த்தன ஐக்கியதேசிய கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டால் அது சிறந்த விடயமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதிதலைவராக அவரால் ஐக்கியதேசிய கட்சிக்குபுத்துயுர் கொடுக்க முடிந்தால் அதுவும் சிறந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் இரு கட்சிகளும் இணைவது குறித்து கூட சிந்திக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.