Header Ads



மைத்திரிக்கு எதிராக CID யில் முறைப்பாடு


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும் என குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


கத்தோலிக்க விஹாவனயே அமைப்பின் தலைவர் சிந்தக அமரசிங்க இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கப்படும் சாட்சியங்களில் வெளியாகியுள்ள தகவல்களுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதியே இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Arrest This Culprit ,Criminal, Terror M. Sirisayna..

    ReplyDelete

Powered by Blogger.