Header Ads



சான்றிதழ் அளிக்கும் வரையில், விமான நிலையம் திறக்கப்படாது


சுகாதார பிரிவினரால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சான்றிதழ் அளிக்கும் வரையில் விமான நிலையம் திறக்கப்படாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் நாட்டினுள் கொவிட் 19 தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் இதன்போது தெரிவித்தார். 

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இவற்றை தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடல் மார்க்கமாக இலங்கைக்கு பிரவேசிக்க முற்படும் இந்தியர்கள் தொடர்பில் தீவிரமாக அவதானிக்கப்படுவதாகவும், நாட்டினுள் கொவிட் 19 தொற்று மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.