Header Ads



அபுதாபி வெடி விபத்தில் மற்றுமொரு இலங்கையர், காயமடைந்து தீவிர சிகிச்சை பிரவில் அனுமதி


அபுதாபியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடி விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் காயமடைந்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ள நிலையிலேயே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான துபாயில் திங்களன்று இடம்பெற்ற இரண்டு தனித்தனியான வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அந் நாட்டு காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பவத்தில் பலியான இலங்கைப் பிரஜை மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவர் ஆவார்.

No comments

Powered by Blogger.