Header Ads



வெலே சுதாவின் சகோதரி மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த போது இவர்கள் கைது


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி, அவரின் கணவர் உள்ளிட்ட மூவர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹக்மன – முருதமுரே பகுதியில் உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சாரதியிடமிருந்து 5 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தெய்யந்தர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.