Header Ads



ஐ.தே.கவின் தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும் - திஸ்ஸ அத்தனாயக்க


(எம்.மனோசித்ரா)


ஐக்கிய தேசிய கட்சியின் தலை விதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.


ஜனநாயகத்திற்கு விரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவுள்ளார் என்றும் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று -07- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.