Header Ads



சில அமைச்சர்களின் செயற்பாடுகள், சம்பந்தமாக மிகவும் வருத்தப்படுகிறேன்


பெரும்பான்மையான மக்களின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் சம்பந்தமாக மிகவும் வருத்தப்படுவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில அமைச்சர்களை சாதாரண மக்கள் மாத்திரமல்ல தன்னாலும் சந்திக்க முடியவில்லை.

அனைவரும் அல்ல சில அமைச்சர்கள் தொலைபேசி அழைப்புகளை கூட எடுப்பதில்லை. இவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கிய நோக்கு கொள்கைக்கு பொருந்தாது. மக்களே அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்பதை அமைச்சர்கள் எண்ண வேண்டும்.

இதனால், அமைச்சர்கள் மக்களின் ஊழியர்கள். பல அமைச்சர்களை சந்திக்க மட்டுமல்ல, அவர்களை தொலைபேசியிலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை. இது சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்.

பொது மக்களின் நிலைப்பாடு என்பது எப்போதும் ஒரு பக்கம் இருக்காது. மக்களின் நிலைப்பாடுகளுக்கு செவி கொடுக்கவில்லை என்றால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே உங்களுக்கும் ஏற்படும் என்பதை இந்த அமைச்சர்களுக்கு கூறி வைக்க விரும்புவதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.