Header Ads



சம்மாந்துறை பிரதேச சபை, தவிசாளாரக மீண்டும் நௌஷாட்



(எம்.எம்.ஜபீர்)

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்த நிலையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று -02- இடம்பெற்றது.

அதன் பிரகாரம் பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற அமர்வில் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான  ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு  திறந்த வாக்களிப்பில் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் ஏழு வாக்கினைப் பெற்றுக்கொண்டதுடன் பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் பதின்மூன்று வாக்கினைப் பெற்றுக் கொண்டு மீண்டும் தவிசாளராக ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தெரிவு செய்யப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஐந்து உறுப்பினர்களும், ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  ஏழு உறுப்பினர்களும், ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் உள்ளிட்ட  பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளாரக மீண்டும் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, சம்மாந்துறை  பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், உதவித் தவிசாளர் ஏ.அச்சி முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை  பிரதேச சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தவிசாளராகப் பதவி வகித்த ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தனது தவிசாளர் பதவியை கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி இராஜினாமாச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சிறந்த ஒரு நகரம் சிறந்த ஒருவரினால் சிறப்புப் பெறட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.