Header Ads



பதவி விலகும் முடிவை, கைவிட்டார் மகிந்த தேசப்பிரிய


பதவிக்காலம் முடிவடையும் வரை தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனது பதவிக்காலம் முடிவடையும் வரை அல்லது புதிய ஆணையாளர் நியமிக்கப்படும்வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிக்க தீர்மானித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 15ம் திகதி பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

15ம் திகதிக்குபின்னர் நீடித்த விடு;ப்பினை எடுக்க தீர்மானித்திருந்தேன் தற்போது அந்த எண்ணத்தை கைவிட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.