Header Ads



பாகிஸ்தான் - இலங்கை நீண்டகால உறவு, அலி சப்ரி பாராட்டு


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மத் சாத் கட்டாக்,  நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியினை அவரது அலுவலகத்தில் செப்டம்பர் 21 ஆம் திகதி 2020 சந்தித்து கலந்துரையாடினார்.


புதிதாக நியமனம் பெற்ற நீதி அமைச்சருக்கும் , இலங்கை புதிய அரசாங்கத்திற்கும் உயர் ஸ்தானிகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு , அமைச்சர் அலி சப்ரி நீண்ட காலமாக இரு நாடுகளும் பேணிவரும் வலுவான இருதரப்பு உறவவினைப் பாராட்டினார்.


இச்சந்திப்பில் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர ஒத்துழைப்பு உட்பட பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

No comments

Powered by Blogger.