தாய், தந்தை, குழந்தை ஆகியோரின் இறுதி கிரியைகள் நாளை....!
கண்டி - பூவெலிகட பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த தாய் தந்தை குழந்தை ஆகியோரின் இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.
தற்போது அவர்களின் சடலங்கள் அயலவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றிரவு கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் கட்டிடத்திற்கு நிர்மாண பணிகளுக்கு அனுமதி வழங்கிய விதம் மற்றும் ஏனைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் கட்டிட நிர்மாணத்திற்கு முறையாக அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டார் கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
Post a Comment