பாராளுமன்றத்தில் மகனுக்கு, தந்தை கொடுத்த உற்சாகம் (அழகிய புகைப்படம் இணைப்பு)
பிள்ளைகள் எவ்வளவு பெரியவர்களானாலும் பலம் பொருந்திய இடங்களுக்கு வந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் தந்தை என்ற உறவு அருகில் இருக்கும்போது கிடைக்கும் தைரியம் வேறுவிதமானது.
அந்த தைரியத்தை தனது மகனுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏனைய நாட்களில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும், கடந்த 26 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஜனக பண்டார தெண்ணகோன்,
தனது மகனின் கன்னி பாராளுமன்ற உரை இடம்பெறும் பொழுது மகனுக்கு அருகில் பின்வரிசையில் போய் உட்கார்ந்து கொள்கிறார்.
"தந்தை "என்றாலே உற்சாகப்படுத்துதல், தட்டிக் கொடுத்தல், தைரியமூட்டுதல் என்பதுதான்"
பலம் என்பது போரில் அல்லது வாக்குவாதம் ஒன்றில் தன் திறமையைக் காட்டி எதிராளியிடம் இருந்து வெற்றி பெறுவது அல்ல. எவன் ஒருவன் தன்னையும் விட சக்தி மற்றும் வல்லமை குறைந்தவனுடன் அறிவுரீதியிலோ அல்லது வலிமைரீதியிலோ மோதாது அவனுடைய எழுச்சிக்கும் தன்னாலான பங்களிப்பினை வழங்குவதற்காக உழைப்பதாகும்.இவ் இயல்பு எங்கள் எத்தனை பேரிடத்தில் இருக்கின்றது.
ReplyDelete